தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Thursday, October 6, 2011

ரஹ்மத் ஸ்கூல் இயங்கும் தடம் எது? பணமா? சேவையா?


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அப்துல் காசிம் நகரில் (பட்டுக்கோட்டை ரோட்டில்) அமைந்துள்ளது இப்பள்ளி. இது ரஹ்மத் ட்ரஸ்ட் (சென்னை ரஹ்மத் அறக்கட்டளை) சார்பாக பெண்களுக்காக 1994-ல் அடிக்கல் நாட்டப்பட்டு  1996 ல் துவங்கியது. இந்த அடிக்கல் நாட்டு விழா வில் வைரமுத்து, பாரதிராஜா போன்று சினிமாதுறையே முதன்மை வகித்தது என்று கூறுகையில், பள்ளிக்கும்- சினிமாவிற்கும் என்ன சம்மந்தம்? இப்பள்ளி துவக்கத்திலேயே பாதி வேலை முடிந்தும் முடியாததுமாக திறக்கப்பட்டது. துவங்கிய முதல் ஆண்டுலேயே கட்டிடத்திற்காக தரத்தில் ஆரம்பித்தது முதல் பிரச்சனை இப்பள்ளிக்கு
தமிழக மக்களுக்கு நபி மொழி தொகுப்பான புகாரி-யை முதலில் தமிழாக்கம் செய்தது இந்த ட்ரஸ்ட் தான். தற்போது சென்னையை தலைமையாக கொண்டு இயங்கும் .இந்த ட்ரஸ்ட் முதல்வர் முஸ்தபா, இவர் முத்துப்பேட்டையை சார்ந்தவர். இந்த ட்ரஸ்டிகளாக இவர்களின் குடும்ப நிர்வாகமே இருக்கிறது. ஆனால் இதன் ஆலோசகர்களை பார்ந்தால் தான் வேடிக்கை Mr. MALAISAMI I.A.S (RAJYA SABHA)
KAVIPPERRARASU "VAIRAMUTHU" KAVIKO "ABDUL RAHMAN"
Mr. KALYANASUNDARA THEVAR (CHAIRMAN) PANCHAYAT UNION - MUTHUPET
Mrs. KAAMILAH, D/O. M.A. MUSTHAFA.
அது போகட்டும். இப்பள்ளியின் முதன்மை ஆசிரியராக ஒரு முஸ்லிம் பெண்கள் கூட இருந்தது இல்லை. முஸ்லிம் ஆசிரியர்களும் குறைவு தான்.

அடுத்து இவர்கள் ஆரம்பித்து சரியாக இரண்டு ஆண்டுகள் இருக்கும் 1997-1999 வரை உள்ள இடைப்பட்ட ஆண்டில் இவர்களது வாகனம் முத்துப்பேட்டை –திருத்துறைபூண்டி சாலை 10Km ல் கோபாலசமுத்திரம் என்ற இடத்தில் வைக்கோல் மீது வேன் வேகமாக சென்றதில் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. ஒட்டுமொத்த குழந்தைகளும் தண்ணீருக்குள். யாருக்கும் பெரிய அளவு சேதம் இல்லை என்றாலும், அப்போது சில பெண் குழந்தைகளுக்கு காதில் சேற்று நீர் ஏறியது. இதை மருத்துவர்களும் சரியாக கவணிக்காததால், இச்சம்பவம் நடந்து சில ஆண்டுகளுக்கு பின் அக்குழந்தைகள் காதில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு சென்றது.
படிக்கும் வயதில் எது கூடாதே அந்த நாகரிகத்தை தேடிய பெண்கள் இவர்களின் பள்ளியில் வெளியில் அழைத்து ஓடும் நிலை உறுவாகவே. அப்போது தான் பள்ளி தனது கட்டுப்பாட்டை அதிகரித்தது. அதுமட்டுமல்லாது பொதுவாக பள்ளியில் சிறு சிறு சம்பவங்கள் அடிக்கடி நடப்பது உண்டு. இதில் இப்பள்ளி மட்டும் என்ன விதிவிளக்கா? என்ன.

பொதுவாக ஆண்டு விழா நிகழ்ச்சிகள் என்றால் போதும் ஆட்டம், பாட்டம், என பள்ளிகள் வாரி கட்டிக்கொண்டு நிற்கும். இதில் இப்பெண்கள் பள்ளியும் சிக்கியது. ஆரம்பித்த காலம் முதல் இப்போது வரையும் இங்கு ஆடல், பாடல் காட்சிகள். ஆரம்பத்தில் ஒரு வயது வந்த பெண் நடனம் ஆடியதற்காக முத்துப்பேட்டை ஜமாஅத் நிர்வாகங்கள் பள்ளியையும், ஆட்டம் போட்ட பெண்னையும் கட்டித்தது. அதன் பின் வயது வந்த முஸ்லிம் பெண்கள் ஆடுவதை நிறுத்தியது. ஆனாலும் பருவ வயது அடைய கூடிய பெண்களை ஆடிவிடுவதை நிறுத்தவில்லை.

இஸ்லாமிய மார்க்த்தின் இரண்டு தூன்களான திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகள் என்பதை நாம் அறிந்தவர்கள். அது தமிழில் கிடைத்ததால் சாமானிய மக்களும் இஸ்லாத்தை பள்ளி அறிய முடிந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. அப்படி பட்ட தூன்களில் ஒன்றான நபி மொழி தொகுப்பை முதல் முதலில் தமிழில் வெளியிட்ட சென்னை ரஹ்மத் அரக்கட்டளை என்பதையும் நாம் அறிந்தவர்கள். http://www.rahmath.net/Index.aspx அப்படி பட்ட இந்த நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது மேற்க்கண்ட ரஹ்மத் பெண்கள் பள்ளியும். இவர்கள் மார்க்கம் மக்களுக்கு போகவேண்டும் என்பதற்காக மொழயாக்கம் செய்தார்களா? அல்லது மக்களிடம் பணம் பார்க்கலாம் என்பதற்காக செய்தார்களா? நன்மையை நாடியவர்களாக இருந்தால் இவர்கள் இப்பள்ளியிலும் இம்மார்க்க விசயங்களிலும் சரியாக இருந்திருக்க வேண்டும்.

. (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக! 17-85

மார்க்கத்தை கூறுவதை (மார்க்க கல்வியை) விட உலக கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களை என்னவென்பது. இவர்கள் மட்டும் அல்ல இதன் சுற்று வட்டாரத்தில் சில முஸ்லிம்கள் மார்க்க அடிப்படையில் கொண்டு செல்லப்போகிறோம் என்று பள்ளி கூடங்களை உருவாக்கி பணத்தை பார்த்ததும், அதன் மோகத்தின் காரணமாக மார்க்கத்தை பின்னுக்கு தள்ளி உலக ஆசைக்கு ஆட்படுவிட்டனர். ஆண்டு விழா என்ற பெயரில் பல பள்ளிகள் ஆண்களையும், பெண்களையும் பள்ளி கூடங்களில் காட்சி பொருளாக காட்டிவருகின்றனர். குழந்தைகளுக்கு கல்வியை புகட்ட வேண்டிய பள்ளிகள் இது போன்று நடப்பது ஆனாகரிகமானது.

பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீட்டிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. அல்குர்ஆன் 2:85

 அதே போன்று இவர்கள் இல்லத் திருமணங்களை இப்பள்ளியில் வைத்து நடத்துவதுடன் இரண்டு மூன்று நாட்களுக்கு இலவச சாப்பாடு என்றும், சினிமாதுறையினரை அழைத்து கூத்தடிப்பதும் இவர்களின் வளக்கமான செயலாக உள்ளது. பள்ளியின் ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளும் கூட இது போன்று சினிமா விபச்சாரர்களை அழைத்தும் கல்விக்கு உரிய கன்னியத்தை மட்டப்படுத்துவது இவர்களின் வாடிக்கையான நிகழ்வு.
முத்துப்பேட்டையில் மிகபெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலவதாக இருப்பது இவர்கள் தான் எனலாம். அந்த அளவிற்கு பணம் இருந்தும் மார்க்கம் இல்லையே என்ற போது வேதனை தான். சில (2) ஆண்டுகளுக்கு முன் தான் இங்கு பெண்கள் தொழுகைக்காக பள்ளிவாசல் கட்டப்பட்டது. இங்கு தற்போது பெண்கள் பாதுகாப்பு மற்றும் தொழுகைக்கு மட்டும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை தவிற மற்றவைகள் வேதனை தான்.

9மணிக்கு பள்ளி ஆரம்பம் என்றால் காலை 6.30, சில இடங்களில் 7மணிக்கு எல்லாம் வாகனம் வந்து கொண்டு சென்று மாலை 6.30 அல்லது 7 மணி வரை (Special Class) சிறப்பு வகுப்பு முடித்து வீட்டிற்கு வரும் பெண் குழந்தைகள் சாப்பிடுமா? அல்லது வீட்டு பாடம் எழுதுமா? அல்லது நாளை வகுப்பு தேர்வு இருக்குமே அதற்கு படிக்குமா? அல்லது தங்கள் பெற்றோர்களிடம் சற்று உரையாடுமா? அல்லது குர்ஆன் ஓதுவது போன்ற காரியங்களில் ஈடுபடுமா? என்பது எல்லாம் கேள்வி குறி(?) பின்னர் 8மணிக்கு உறக்கம். காலை மீண்டும் தொடரும் இதே புரானம். சரி சனிகிழமை தான் ஓய்வு எடுக்கலாம் என்றால் அன்றைக்கும் வகுப்புகளை வைத்து குழந்தைகளை மூளையை கசக்குவது என்று அடிக்கிக் கொண்டே போகலாம். ஞாயிற்றுகிழமை மட்டும் தான் விடுமுறை என்றாலும் அதிலும் வீட்டுப்பாடம், மறுநாள் (Class test) தேர்வு என விலுந்து விலுந்து படிக்கும் குழந்தைகள். பெற்றோர்கள் குழந்தையை வா.. வெளியூர் போகலாம் என்றால் முடியாது என்கின்றது குழந்தைகள். பின்ன படிக்கலட யாரு அடி வாங்குரது..     

இவர்கள் பள்ளி சற்றும் பிரபலம் ஆகவே, அவர்களின் சேர்க்கை போன்றவற்றை மாற்றி அமைத்தனர். அது என்ன?வென்றால், வேறுபள்ளியில் பயின்ற குழந்தைகளுக்கு (Entrance Exam )நூழைவு தேர்வு என்று வைத்து நன்கு படிக்கும் குழந்தைகளை மட்டும் சேர்ப்பார்களாம். குழந்தைகள் வேறுபள்ளியில் சரியாக படிக்கவில்லை என்பதற்காக தான் இவர்களிடம் (Rahumthu School) கொண்டுவந்து சேர்க்கிறார்கள். நன்றாக குழந்தை படிப்பதாக இருந்தால் ஏன் பெற்றோர்கள் இங்கு வருகிறார்கள்? என்ற அறிவு கூட இல்லாதவர்களாக உள்ளனர். படிப்பு சரியாக வராத குழந்தைகளுக்கு தான் சிறந்த பள்ளி கூடம் தேவை. நன்றாக படிக்கும் குழந்தைகள் எங்கு படித்தாலும் நன்றாக படிக்கும். சிறுபான்மையினர் கோட்டாவில் பள்ளியை துவங்கிய இவர்கள் உன்மையில் அறிவுடையவர்கள் தான் என்றால் படிக்காத குழந்தைகளை கொடுவாருங்கள் நாங்கள் படிப்பை சரியாக கற்றுக்கொடுக்கிறோம் என்று கூறுவார்களா? இது இப்பள்ளிக்கு மட்டும் அல்ல. பல பள்ளிகள் இது போன்ற முட்டால் தனமாக செய்கின்றனர். சில பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முதலில் படித்திருக்கவேண்டும் என்பார்கள். தாங்கள் தான் படிக்கவில்லை தங்கள் குழந்தையாவது படிக்கட்டும் என்றால் இப்படி ஒரு கட்டளைகள். இது அதையும் விட கொடுமை.

படிக்காத குழந்தைகளை ஒதுக்கிவிட்டு படிக்கும் குழந்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு 10ம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வுகளில் 100% என்று பீத்திக்கொள்வது (http://adiraipost.blogspot.com/2009/05/2-100.htmlஇது போன்ற தனியார் பள்ளி நிர்வாகத்தின் குணம் என்பதை தாங்கள் அறிவீர்களா? இவர்கள் உன்மையில் கல்வியை சேவையாக செய்தால், படிக்காத குழந்தைகளை அனுப்புங்கள் நாங்கள் சரியாக கற்றுத்தருகிறோம் என்று கூறட்டும். பார்ப்போம்.


அதுமட்டுமா? இப்பள்ளியில் பணபரிப்பு கொடுமையே கொடுமை. அனைத்தையும் எழுதுவதாக இருந்தால் கை தான் உடையும். சகோதரர்களே. வெளிநாடுகளில் தங்கள் குடும்பத்திற்காகவும், தங்களில் குழந்தைகளுக்காகவும் இரவு பகலாக வேலை பார்க்கும் நம் சகோதரர்கள் அனுப்பும் பணத்தை சர்வசாதாரனமாக கல்வியின் பெயரில் சுரன்டும் இவர்களை என்னவென்பது. தங்கள் குழந்தையின் ஆங்கில அறிவுக்காக தங்களை ஆட்படுத்திக் கொண்ட எத்தனை சகோதரர்கள் வெளிநாடுகளில் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதே போன்று முத்துப்பேட்டையில் உள்ள பெண்கள் அரசு பள்ளியில் (State Borad ) மாநில பாடத்திட்டத்திலேயே ஆங்கிலம் தனி + தமிழ் வழி என இரண்டு முறையும் உள்ளது. இதில் எதில் வேண்டும் என்றாலும் சேரலாம். பணம் பணம் என்று அழையும் தனியார் பள்ளிகள் நிர்வாகத்திற்கு வேட்டுவைக்கலாம். தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டனத்தை வசூல் செய்தாலும், சீருடை, வாகனம் போன்றவற்றில் தங்களது கணக்கை சரிசெய்து கொள்கின்றன.
அதுமட்டுமின்றி பெண்கள் படிப்பை பொறுத்தவரை தாங்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு வரை கல்வியை கொடுத்து நிறுத்துவது நல்லது. மேற்கொண்டு கல்வியை கற்க சென்று சில பெண்கள் வழி தவறியதையும் நாம் அறிவோம். தங்கள் குடும்பம் என்று வரும் போது தங்கள் குழந்தை கல்வியை கற்றுக்கொடுக்கும் அளவிற்கு கற்றிருந்தால் போதுமானது.

2.42 அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!



2.145 வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அத்தனை சான்றுகளையும் (முஹம்மதே!) நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுப வராக இல்லை. அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சையை நீர் பின்பற்றினால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

இவர்கள் தான் தற்போது 2011ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஆண்டு மலரில் முஸ்லீம்கள் தங்களது உயிருக்கு மேலாக மதிக்கும் நபி (ஸல் ) அவர்களை கற்பனையாக உருவம் வரைந்து புத்தகம் வெளியிட்டு நபி (ஸல் ) அவர்களை அவமனபடுத்தியது. இது குறித்து முத்துப்பேட்டை கிளை, இப்புதகங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுத்தியும் பள்ளி நிர்வாகம் அலட்சியம் செய்யவே. இப்பிரச்சனை TNTJ மாவட்ட நிர்வாகத்திற்கு செல்லவே, பள்ளி நிர்வாகத்தையும் தாளாளர் உள்ளிட்ட அனைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் புத்தகங்களை உடனே திரும்பபெற கோரியும் ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முன்பு மாபெரும் முற்றுக்கை போராட்டத்தை அறிவித்தது TNTJ மாவட்டம் நிர்வாகம்.



 இன்ஷா அல்லாஹ் 10.10.2011 காலை 10.00மணிக்கு, கண்டன உரை மேலான்மை குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தஃபி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.  நபி (ஸல் ) அவர்களை அவமானப்படுத்திய கயவர்களின் முகத்திரை கிழித்தெறிய அனைவரும் குடும்பத்துடன் வருக..
இவன்
TNTJ,


குறிப்புசென்னை ரஹ்மத் ட்ரஸ்ட் ஆரம்ப காலத்தில் சகோ. பி.ஜே அவர்கள் தான் மொழியாக்கம் செய்தார் என்று எமக்கு நினைவில் (1994 முதல் பதிப்பில்) உள்ளது. அதே போன்று திர்மிதி 1 பாகம் பி.ஜே அவர்கள் தான் மொழிபெயர்த்தார். பின்னர் இது தவ்ஹீத் கிதாப் என்று மக்கள் கூறிவிடுவார்கள் என்பதற்காக அடுத்த அடுத்த புகாரி போன்ற மொழயாக்கங்கள் வேறு நபருக்கு மாற்றிவிட்டார்கள். என்று நான் அறிந்துள்ளேன்.  

 புகைப்படங்கள் நன்றி:  ரஹ்மத் முகநூல் Click
இனியேனும் இவர்கள் மார்க்க விசயத்தில் அலட்சியமாக இருப்பார்களேயானால் இது அவர்களுக்கு தான் கேடு.

7.165. கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.

No comments:

Post a Comment