தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Tuesday, September 27, 2011

ஹஜ் சர்வீஸ்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடும்

கடந்த சில ஆண்டுகளாக தனியார் நடத்தும் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகிகளே ஹஜ் சர்வீஸ் நடத்தி அது குறித்து பல புகார்களை தவ்ஹீத் ஜமாத் சந்திக்க நேர்ந்ததை அனைவரும் அறிவீர்கள்.

கடந்த காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் சார்பிலோ, அல்லது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பிலோ இது போன்ற சர்வீஸ்கள் நடத்தும் போது, அந்தக் குறைபாடுகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் அறிவீர்கள்.

மக்கள் மத்தியில் நாம் கட்டிக்காத்து வரும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் இது குறித்து கடந்த 22/09/2011 அன்று மாநில நிர்வாகக் குழு மற்றும் மேலாண்மைக் குழுவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை அனைத்து சகோதரர்களுக்கும் அறியத் தருகிறோம்.

1) மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், கிளை நிர்வாகம் சார்பிலோ, மற்றும் ஜமாஅத்தில் உள்ள பல்வேறு அணிகள் சார்பிலோ உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஹஜ் சர்வீஸ்கள் நடத்தக் கூடாது.
நம் சார்பில் அரசிடம் அனுமதி பெற்றும் நடத்தக் கூடாது. அனுமதி பெற்றவர்களுடன் டை அப் முறையிலும் ஹஜ் சர்வீஸ் நடத்தக் கூடாது.

2) வளைகுடா நாடுகளின் கிளைகள் தவிர மற்ற எந்தக் கிளைகளும் உம்ரா சர்வீஸ்களும் நடத்தக் கூடாது.
வளைகுடா நாடுகளில் உம்ரா சர்வீஸூக்கு விதிவிலக்கு அளிப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:

* வளைகுடாவில் இருந்து உம்ராவுக்கு அழைத்துச் செல்லும் போது அதில் ஹஜ்ஜைப் போல அதிகமான நாட்களோ, அதிகப்படியான சர்வீஸ்களோ இல்லை. மினா, அரஃபா, முஸ்தலிபாவிற்கு அழைத்துச் செல்லுதல், அதிக நாட்கள் தங்க ஏற்பாடு செய்தல் போன்றவை இல்லை. உம்ராவுக்கு புறப்பட்ட தினத்திலேயே திரும்பி வந்து விட முடியும். அதிகபட்சம் ஐந்து மணி நேரத்திற்கு மேல் மக்காவில் இருக்கும் அவசியம் ஏற்படாது. அது குறித்து விமர்சனங்கள் வரவும் இல்லை. வருவதற்கு வாய்ப்பும் இல்லை. இதன் காரணமாக வளைகுடா கிளைகள் ஹஜ் சர்வீஸ் நடத்தக் கூடாது என்றும், உம்ரா சர்வீஸ் நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் இருந்து உம்ரா சர்வீஸ் நடத்துவதற்கும் வளைகுடாவில் இருந்து உம்ரா சர்வீஸ் நடத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. உதாரணமாக இந்தியாவில் இருந்து உம்ராவிற்கு அழைத்துச் செல்லும் போது அதிக நாட்கள் தங்க வைத்தல், பராமரித்தல் போன்ற பலவித சர்வீஸ்கள் உள்ளன. இதில் குறைபாடுகள் ஏற்பட்டு ஜமாஅத்தின் பெயர் கெட்டுப்போக வாய்ப்புகள் உள்ளன. வளைகுடாவில் இருந்து உம்ராவுக்கு அழைத்துச் செல்லும் போது இந்த நிலை இல்லை என்பதால் இவ்வாறு வேறுபடுத்தி முடிவு எடுக்கப்பட்டது.

ஒரு வேளை உம்ரா சம்மந்தமாகவும் ஆதாரத்துடன் விமர்சனம் வரும் பட்சத்தில் அது குறித்தும் பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் எனவும் நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் இதன்மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

3) மாநில, மாவட்ட, கிளை, மற்றும் மண்டல நிர்வாகிகளும் தனிப்பட்ட முறையில் ஹஜ் சர்வீஸ்கள் நடத்தக் கூடாது. ஜமாத்தே நேரடியாக நடத்தும் போது ஏற்படும் குறைபாடுகளும் விமர்சனங்களும் நமது நிர்வாகிகள் நடத்தும் போதும் ஏற்பட்டு விடும். கடந்த காலங்களில் இது போல ஏற்பட்டுள்ளது.
எனவே உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ உள்ள நிர்வாகிகள் யாரும் ஹஜ் சர்வீஸ்கள் நடத்தக் கூடாது.

அவ்வாறு நடத்துவோர் எந்த மட்டத்திலும் நிர்வாகத்திற்கு தேர்வு செய்யப்படக் கூடாது.

(இது பாக்கர் தொடர்பான விமர்சனங்கள் வந்த போதே முந்தைய நிர்வாகம் எடுத்த முடிவாகும்.)

ஆனால் வளைகுடாவில் உள்ள நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் உம்ரா சர்வீஸ்கள் நடத்தலாம். வளைகுடா கிளைகளுக்குச் சொன்ன காரணமே இதற்கும் பொருந்தும் என்பது தான் இதற்குக் காரணம்.

குறிப்பு: நம் ஜமாஅத்திற்கு எந்த நேரத்தில் களங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக மாநில நிர்வாகம் கடந்த காலங்களில் இது போன்ற பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்..

உதாரணமாக,
• மாநில நிர்வாகிகள் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தாங்கள் நடத்துகின்ற அல்லது நடத்த திட்டமிட்டுள்ள தொழிலுக்கு பகிரங்கமாக மக்களிடம் பங்கு சேர்க்கக்கூடாது. பொதுமக்கள் என்ற அடிப்படையில் தங்களது தனிப்பட்ட சொந்தம் மற்றும் தனிப்பட்ட நட்பு அடிப்படையில் தவிர.
• மாநில மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பகிரங்கமாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடக்கூடாது.
• மாநில, மேலாண்மைக் குழு, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் குலுக்கல் சீட்டு நடத்தக் கூடாது.
என்ற முடிவுகளைப் போல, ஜமாஅத்தின் நலன் கருதி மேற்கண்ட முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தலைமை நிர்வாகக்குழு, மேலாண்மைக்குழு கூடி எடுக்கப்பட்ட இம்முடிவுக்கு ஏற்ப தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

இப்படிக்கு..,

ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment