தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Thursday, October 13, 2011

உங்கள் ஊர் கிளைகளுக்கும் வந்ததா?

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு..
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

நம்முடைய ஜமாஅத்தின் பிரச்சாரத்தையும், செயல்பாடுகளையும் ஒடுக்குவதையே குறிக்கோளாக கொண்ட தமுமுக, பல ஊர்களில் ஊர் ஜமாஅத்தார்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு நம்முடைய ஜமாஅத் சகோதரர்களை சில ஊர்களில் அடித்து சித்ரவதைகள் செய்ததையும், பல இடங்களில் பிரச்சாரத்தை தடுப்பதற்காக முக்கிய மூலதாரிகளாக செயல்பட்டவர்கள் தற்போது உள்ளாட்சி தேர்தலில் ”எங்களுக்கு ஓட்டு போடுங்க” நாங்கள் தான் முஸ்லிம்களின் காவலர்கள் என்று நம்முடைய ஜமாஅத்திற்கு கடிதங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அல்ஹம்துரில்லாஹ்... அன்று நம்மை பார்த்து ஏசியவர்கள் இன்று நம்முடைய ஆதரவு இன்றி எந்த வார்டுகளிலும் வெற்றியடைய முடியாது என்ற நிலைக்கு அல்லாஹ் அவர்களின் உள்ளத்தை மாற்றி விட்டான்.

அன்று நம்முடைய பள்ளிகளை கைப்பற்றுவதற்காக இவர்கள் திமுக ஆட்சியில் வக்கு போர்டை கைபாவையாக பயன்படுத்தி திருடப்பார்த்தவர்கள். தனியாக நம்முடைய ஜமாஅத்திற்காக பள்ளி கட்ட ஆரம்பித்தால் அதை எவ்வாறு எல்லாம் தடுக்கலாம் என்று நினைத்தவர்கள் இன்று அதே பள்ளிக்காக நாங்கள் இருக்கிறோம் என்று அவர்களே கூறும் அளவிற்று மாறியதாக செய்திகள்.

சில ஊர்களில் ஆதரவு கேட்டு நம்முடைய ஜமாஅத்திற்கு கடிதங்களும் வந்துவிட்டது. மேலும் விளக்கம் தேவை என்றாலும் நம்முடைய ஜமாஅத் அழைத்தால் வாக்குறுதியும் அளிப்பார்களாம்.

எங்க கொண்டுபோய் எழுதா? இவங்க வாக்குறுதியை?

இது போன்று கடிதங்கள் உங்கள் கிளைகளுக்கும் வந்துள்ளதா?

முத்துப்பேட்டையில் ரஹ்மத் பள்ளியை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முத்துப்பேட்டை ஜமாஅத்தார்களுக்கும் நம்முடைய ஜமாஅத்திற்கும் மத்தியல் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை எல்லாம் மறந்து நபி (ஸல்) அவர்கள் என்றதும் பல ஜமாஅத்துக்கள் ஆதரவு மட்டுமின்றி, வருகை தந்ததும் குறிப்பிடதக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக வின் மாநில செயற்குழு உறுப்பினர் ஒருவரும் வந்து கலந்து கொண்டார். முத்துப்பேட்டையை சுற்றியுள்ள ஊர்களிலிருந்து மாமாகட்சியினரும் வந்துள்ளனர். இவர்கள் நன்மையை நாடி (நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதற்காக ) வந்திருந்தால் அதற்கான கூலியை மறுமையில் அல்லாஹ் வழங்குவான்.

இதற்கு முன்னும் நாம் டென்மார்க் போன்ற செய்தி நிறுவனங்களை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்து கொள்ளாதவர்கள் தான் இவர்கள். இப்போது மட்டும் என்ன ? மாற்றம் என்ற கேள்வியை நாம் இறைவனிடம் விடுவது தான் சிறந்தது.

ஓட்டுகாக நம்மை அவர்கள் நாடவேண்டிய நிலைக்கு அல்லாஹ் அவர்களை ஆக்கிவிட்டான்... என்று நினைக்கும் போது... அல்ஹம்துரில்லாஹ்..

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். 'உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்' என்று அவன் கூறினான். 'எனது வழித் தோன்றல்களிலும்' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். 'என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது' என்று அவன் கூறினான். அல்குர்ஆன் 2-124

நம், நம்முடைய முதல் இமாம் இப்ராஹீம் நபி அவர்களின் கொள்கைகளை உறுதியாக பின் பற்ற படுபவர்களாக, என்றைக்கும் யாருக்காகவும் எதற்காகவும் மார்க்கத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று நிர்பதினால் தான் அல்லாஹ் நமக்கும் நம்முடைய ஜமாஅத்திற்கும் இவ்வளவு பெரிய கன்னியத்தை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

நாம் அன்று வளைந்திருந்தால் ”யார் எல்லாம் நம்மை எதிர்த்தார்களே” அவர்கள் இன்று நம்மையே நாடவேண்டிய நிலைக்கு அல்லாஹ் மாற்றியிருப்பானா? என்பது கேள்வி குறி தான்.

'எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்' (என்றனர்.) அல்குர்ஆன் 2:128

நாம் இந்த கொள்கை உறுதியல் நிலைத்திருக்கக் கூடியவர்களாக ஆக்க அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் துஆசெய்வோம்.

தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார். 2:130

No comments:

Post a Comment